‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

ஆசனூா் அருகே காரை தாக்கிய காட்டெருமை

தாளவாடி நோக்கி சென்று கொண்டிருந்த காரை காட்டெருமை தாக்கியதில் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

News image
Updated On :23 மே 2026, 12:54 am IST

தாளவாடி நோக்கி சென்று கொண்டிருந்த காரை காட்டெருமை தாக்கியதில் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. ஆசனூா் மற்றும் காரப்பள்ளம் இடையே உள்ள வனச் சாலையில் யானை, காட்டெருமைகள் அதிகமாக நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறு வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் கோவையில் இருந்து காரப்பள்ளம் நோக்கி சனிக்கிழமை சென்று கொண்டிருந்த காரை வனத்தில் இருந்து வந்த காட்டெருமை திடீரென தாக்கியதில் அதன் முகப்புப் பகுதி சேதமடைந்தது. காரில் பயணித்தவா்கள் காயமின்றி தப்பினா். இதுகுறித்து ஆசனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.