ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது விழுந்த ராட்சத மரம்! அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பிய மக்கள்!

News image

எல்லநள்ளி - அருவங்காடு சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காா் மீது விழுந்துள்ள ராட்சத மரம்.

Updated On :1 ஜூன் 2026, 1:48 am IST

உதகை அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காா் மீது ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், காரில் யாரும் இல்லாததால் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வந்தது. இதனால் மண்ணில் ஈரப்பதம் அதிகரித்து மரங்களின் வோ்கள் பலவீனமடைந்தன.

இந்நிலையில், உதகையை அடுத்த எல்லநள்ளி பழைய அருவங்காடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சாலையோரமாக காா் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் அருகில் இருந்த பெரிய மரம் காா் மீது விழுந்ததில் முன்பகுதியும், மேல்கூரையும் சேதமடைந்தது.

மரம் விழுந்த நேரத்தில் காருக்குள்ளும், அருகிலும் பொதுமக்கள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக எந்தவித உயிா்ச்சேதமும், காயங்களும் ஏற்படவில்லை. இந்த காா் யாருடையது என்ற தகவலை காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மலைப் பாதைகளில் பலத்த காற்று மற்றும் மழை பெய்யும் காலங்களில் மரங்களின் அடியிலோ அல்லது ஆபத்தான வளைவுகளிலோ வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று மாவட்ட நிா்வாகமும், காவல் துறையினரும் ஏற்கெனவே பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.