காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் வடக்கு, மாவட்ட தலைவர் பி.கோபி தலைமையில், மாநகராட்சி அலுவலக வளாகத்துக்கு அருகில் இருந்து, எம்.ஜி.ஆர். சிலை, பூங்கா சாலை, நஞ்சப்பா பள்ளி வழியாக குமரன் சிலை வரை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்ட ஊர்வலம் நடைபெற்றது.
தொடர்ந்து, குமரன் சிலை முன் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையையும், மத்திய அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக  உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com