பல்லடத்தில் அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் தொடக்கம்

பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் கிளை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் கிளை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாநில துணைத்தலைவர் பேராசிரியர் வீரமணி தலைமை வகித்தார்.  மண்டல துணைத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.  பல்லடம் கல்லூரி முதல்வர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். புதிய கிளையை கோவை மண்டலத் தலைவர் மதியழகன் தொடங்கி வைத்து பேசினார்.  இதில்,  கோவை, திருப்பூர்,ஈரோடு,நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி பேரசிரியர்கள் பங்கேற்றனர். கோபி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com