இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

காங்கயம் அருகே பஞ்சு ஆலையில் தீ விபத்து

காங்கயம் அருகே தனியாருக்கு சொந்தமான பஞ்சு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு  மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 12:18 am

DIN

காங்கயம் அருகே தனியாருக்கு சொந்தமான பஞ்சு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு  மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
  திருப்பூர் மாவட்டம்,  காங்கயம் அருகே பாலசமுத்திரம்புதூரில் பாலசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான பஞ்சு ஆலை இயங்கி வருகின்றது. இதில் பழைய பனியன் கழிவுத் துணியைப் பிரித்து பஞ்சு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  இந்த ஆலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது.  அப்போது பணியில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மளமள என எரிந்து பஞ்சாலை முழுவதும் பரவியது.
தகவலின்பேரில்,  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காங்கயம் தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரம் போராடித் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பஞ்சு,  பனியன், துணிகள் மற்றும் இயந்திரங்கள் உள்பட ரூ. 27 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி சேதமாயின. இந்த தீ விபத்து குறித்து காங்கயம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.