திமுக சார்பில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு, வெள்ளக்கோவிலில் புதன்கிழமை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழு கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற பல்வேறு கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இந்தப் போராட்டத்துக்கு வர்த்தகர்களும், தொழில் நிறுவனங்களும், பொது மக்களும் முழு ஆதரவு தருமாறு திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் வெள்ளக்கோவில், முத்தூர், மூலனூர் பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







