விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

திருப்பூரில் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டதாக 3 பேர் கைது

திருப்பூர் மாநகர  காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டதாக 3 பேரை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 7:03 am IST

திருப்பூர் மாநகர  காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டதாக 3 பேரை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். 
பி.என்.சாலை, பூலுவப்பட்டி சோதனைச் சாவடியில் அனுப்பர்பாளையம்  போலீஸார்  வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், வெள்ளியங்காட்டை சேர்ந்த கோட்டைசாமி, பல்லடத்தைச் சேர்ந்த மதன்குமார், உசேன் என்பது தெரியவந்தது. 
மேலும்,  கோட்டை சாமியும், மதன்குமாரும், அவர்களுடன் குமார் நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வந்த பெண் ஊழியர் சுப்புலட்சுமி என்பவரிடம் மார்ச் 24-ஆம் தேதி வீட்டுக்குப் போகும்போது கத்தியைக் காட்டி மிரட்டி 7 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, கோட்டை சாமி, மதன்குமார் ஆகியோரைக் கைது செய்த காவல் துறையினர் அவர்களுக்கு உடந்தையாக இருந்த உசேனையும் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து 7 பவுன் சங்கிலி, இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் போலீஸார்  பறிமுதல் செய்தனர். இதையடுத்து, கோட்டைசாமி, மதன்குமார், உசேன் ஆகிய 3 பேரும் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.