ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

திருப்பூர், அவிநாசி  ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :5 ஏப்ரல் 2018, 7:00 am IST

திருப்பூர், அவிநாசி  ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். 
இதில், ஊராட்சிப் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், பொது மக்களிடம் கழிப்பறைகள் கட்டுவதன் அவசியம் குறித்த  விழிப்புணர்வு ஏற்பத்திடவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, பிரதமரின் வீடு கட்டும் திட்டம், தமிழக முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் ஆகிய பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், வரும் கோடைக் காலத்தில் பொது மக்களுக்கு எவ்விதத் தடையும் இன்றி குடிநீர் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துச் செயல்பட வேண்டும் எனவும் அனைத்து அரசுத் துறை  அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார். 
மேலும், பொங்குபாளையம் ஊராட்சி, கூட்டுறவு நகரில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அம்மா உடற்பயிற்சி நிலையம், அம்மாபூங்கா அமைக்கும் பணியையும் நேரில் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், செயற்பொறியாளர், செல்வகுமரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்),  பாலசுப்பிரமணியன், உதவித் திட்ட அலுவலர்கள்  ராணி,  அம்பிகா, உதவிச் செயற்பொறியாளர்கள் தனபால், சிவநாத், திருப்பூர், அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும்  அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.