வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

அரசின் நலத் திட்ட உதவிகளை தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர்

தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் முன்னேற்றத்துக்காக  மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத் திட்டங்களை

Updated On :25 டிசம்பர் 2018, 8:23 am IST

தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் முன்னேற்றத்துக்காக  மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று  தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம்,  பொங்கலூர் ஒன்றியம், காட்டூர் கிராமத்தில் மக்கள் குறைதீர் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி முன்னிலை வகித்தார். இதில், 22 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை உள்பட ரூ. 92,500 மதிப்புள்ள அரசின் நலத் திட்ட உதவிகளை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் எல்.முருகன் வழங்கினார்.
அதன் பின்னர் அவர் பேசியதாவது: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் நோக்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசின் திட்டங்களை கண்காணிக்கும் பணியாகும். இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, பொது கழிப்பறை, தனி நபர் கழிப்பறை கோரி மனுக்களை அளித்துள்ளனர். இதன் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மக்களைத் தேடி சென்று குறைகளைக் கேட்கும் முகாம்கள் நடத்துவதன் மூலம் அவர்களின் குறைகளுக்குத் தீர்வுகாண முடிகிறது. மேலும், மத்திய, மாநில அரசின் நலத் திட்டங்களைப் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து, தங்கள் தகுதிக்கேற்ப நலத் திட்ட உதவியைப் பெற்றுக்கொள்ளவும் முடிகிறது.  தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் முன்னேற்றத்துக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து அவர் திருப்பூரில் உள்ள ஆதி திராவிடர் நலத் துறை மாணவியர் தங்கும் விடுதியைப் பார்வையிட்டார்.  மாநில ஆதி திராவிடர் நலக் குழு உறுப்பினர் செல்வகுமார், மாவட்ட ஆதி திராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் மகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.