பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

திருப்பூரில் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட பெண்ணை மிரட்டியவரை போலீஸார் கைது செய்தனர். 

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:11 am

DIN

திருப்பூரில் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட பெண்ணை மிரட்டியவரை போலீஸார் கைது செய்தனர். 
இதுகுறித்து போலீஸார் கூறியது:
திருப்பூர், சாமுண்டிபுரத்தைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவரது மனைவி மதினா பேகம் (42). இவரிடம் திருப்பூர், ராஜீவ் நகரைச் சேர்ந்த எஸ்.ராஜன் (31) என்பவர் சில நாள்களுக்கு முன் ரூ. 6 லட்சம் கடனாகப் பெற்றுள்ளார். அதை உரிய நேரத்தில் திரும்ப அளிக்காத காரணத்தால், ஏற்கெனவே ராஜன் மீது மதினா பேகம் வழக்கு தொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக இரு தினங்களுக்கு முன் இருதரப்புக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, ராஜன் கொலை மிரட்டல் விடுத்ததாக மதினா பேகம் புகார் செய்தார். அதன்பேரில் 15 வேலம்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ராஜனைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.