வாகன உதிரிபாக கடையில் தீ விபத்து

வெள்ளக்கோவிலில் செவ்வாய்க்கிழமை இரவு வாகன உதிரி பாகக் கடை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதில் பொருள்கள் சேதமடைந்தன.
Updated on
1 min read

வெள்ளக்கோவிலில் செவ்வாய்க்கிழமை இரவு வாகன உதிரி பாகக் கடை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதில் பொருள்கள் சேதமடைந்தன.
வெள்ளக்கோவில், காங்கயம் சாலையில், அழகாபுரி நகர் பிரிவு அருகே சுவாமிநாதன் என்பவருக்குச் சொந்தமான நான்கு சக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது.
இரவு வேலை முடிந்து சென்ற பின்னர்,  கடைக்குள் தீப்பிடித்ததாகத் தெரிகிறது. அருகிலிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில், வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் சி.தனசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, இரண்டரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.  இந்த விபத்தில், வாகன உதிரி பாகங்கள், அலமாரிகள், வாகன உயவு எண்ணெய் வகைகள் எரிந்து சேதமடைந்தன. சேத மதிப்பு உடனடியாகத் தெரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com