எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அவிநாசி வாரச் சந்தையில் எடை அளவுத் துறையினர் ஆய்வு

அவிநாசி சந்தைப்பேட்டையில் எடை அளவுத் துறையினர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 1:39 am

DIN

அவிநாசி சந்தைப்பேட்டையில் எடை அளவுத் துறையினர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
அவிநாசி, ஈரோடு சாலையில் வாரம்தோறும் புதன்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம்.  இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகளும், பொதுமக்களும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில்,  புதன்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் சட்டமுறை எடை அளவுத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 6 வியாபாரிகள் எடை இயந்திரத்துக்கு உரிய முத்திரை இடமால் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. 
இதையடுத்து எடை அளவுத் துறையினர் முத்திரையிடாத 6 எடை இயந்திரங்களைப் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர். 
மேலும், வியாபாரிகளுக்கு முத்திரையிடுதல் குறித்து அறிவுறுத்திச் சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.