வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் விலை கடந்த பல மாதங்களுக்குப் பிறகு நூறு சதவீத விலை ஏற்றம் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் தனியார் கொள்முதல் நிலையங்களில் முருங்கைக்காய்கள் வாங்கப்படுகின்றன. தற்போது பூக்கும் பருவமாக இருப்பதால் பெரும்பாலான முருங்கை மரங்களில் காய்கள் கிடையாது.
இதனால், கடந்த சில வாரங்களாக படிப்படியாக வரத்து குறைந்து வருகிறது. கடந்த வாரம் 11 டன் வரத்து இருந்த நிலையில் இந்த வாரம் 5 டன் மட்டுமே கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டுவரப்பட்டன.மேலும், தீபாவளி பண்டிகை, சுப விசேஷங்கள் காரணமாக முருங்கைக்காய் தேவை அதிகரித்துள்ளது.
இதனால் செடி முருங்கைக்காய் கிலோ ரூ. 40, மர முருங்கைக்காய் ரூ.35, கரும்பு முருங்கைக்காய் ரூ. 60 என விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. இது கடந்த வாரத்தை விட நூறு சதவீத விலை உயர்வாகும்.
கடந்த பல மாதங்களுக்குப் பிறகு அதிக விலை கிடைத்ததால் முருங்கை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








