ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கருத்துரு சமர்ப்பிக்காத விடுதிகள் மீது நடவடிக்கை: ஆட்சியர் உத்தரவு

திருப்பூர் மாவட்டத்தில் கருத்துரு சமர்ப்பிக்காத விடுதி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News image
Updated On :12 நவம்பர் 2018, 10:20 pm

DIN


திருப்பூர் மாவட்டத்தில் கருத்துரு சமர்ப்பிக்காத விடுதி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் வெளியூரிலிருந்து வந்து பணிபுரியும் பெண்கள், வளரிளம் பெண்கள், பெண் குழந்தைகள், சிறார்கள் ஆகியோரின் நலனுக்காக நடத்தப்படும் விடுதிகள், தமிழ்நாடு பெண்கள்-குழந்தைகளுக்கான விடுதிகள், இல்லங்களை நெறிமுறைப்படுத்தும் சட்டத்தின் அடிப்படையில் சமூகநலத் துறையில் பதிவு செய்யப்பட வேண்டும்.
அரசு இணையதளம் மூலம் இதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, உரிய முறையில் பூர்த்தி செய்து மாவட்ட சமூகநல அலுவலகத்தில் கருத்துருக்களை 30 நாள்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கருத்து சமர்ப்பிக்காத விடுதி உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.