தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

காங்கயத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

காங்கயத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 நவம்பர் 2018, 10:20 pm

DIN


காங்கயத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஏ.சி.கோவிந்தசாமி நினைவு அறக்கட்டளை சார்பில், காங்கயம், திருப்பூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமை காங்கயம் நகராட்சியின் முன்னாள் தலைவர் ஜி.மணிமாறன் துவக்கி வைத்தார்.
இதில், ஏ.சி.கோவிந்தசாமி நினைவு அறக்கட்டளையுடன் திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நோயாளிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டனர்.
இந்த முகாமில், கண் புரை, கண் நீர் அழுத்தம், மாலைக் கண் நோய், மாறுகண் பிரச்னை, தூரப்பார்வை, கிட்டப்பார்வை உள்ளிட்டவற்றுக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. கண்புரை முற்றியோருக்கு அறுவை சிகிச்சை செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது. மேலும், கிட்டப் பார்வை, தூரப் பார்வை உள்ளவர்களுக்கு குறைந்த விலையில் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.
இதில், காங்கயம் நகராட்சியின் முன்னாள் துணைத் தலைவர் சி.கந்தசாமி, ஒன்றிய அதிமுக இளைஞர் அணி செயலாளர் கே.கே.பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.