மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கிடப்பில் போடப்பட்ட சாக்கடைக் கால்வாய் பணி: திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் சுகாதாரக் கேடு

திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட பாரதி நகரில் பாதியில் நிறுத்தப்பட்ட சாக்கடைக் கால்வாய் பணியால், அப்பகுதியில் வீடுகள் முன்பு கழிவுநீர் தேங்கி

News image
Updated On :12 நவம்பர் 2018, 10:19 pm

DIN


திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட பாரதி நகரில் பாதியில் நிறுத்தப்பட்ட சாக்கடைக் கால்வாய் பணியால், அப்பகுதியில் வீடுகள் முன்பு கழிவுநீர் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருமுருகன்பூண்டி பேரூராட்சி, 10வது வார்டுக்கு உள்பட்ட பாரதி நகரில் பல லட்சம் மதிப்பில் சாக்கடைக் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இப்பணி பாதியில் நிறுத்தப்பட்டு, முழுமையடையாமல் உள்ளது. இதனால் வீடுகள் முன்பு சாக்கடைக் கழிவுநீர் தேங்கியுள்ளது.
இதுகுறித்து திருமுருகன்பூண்டி பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் பாரதி கூறியது:
500க்கும் மேற்பட்டோர் வசிக்கும் பாரதி நகரில் பல ஆண்டுகளாக சாக்கடைக் கால்வாய் வசதி இல்லாததால், வீடுகள் முன்பு சாக்கடைக் கழிவு நீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டது. இப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.
நீண்ட காலக் கோரிக்கைக்குப் பிறகு, மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி இப்பகுதியில் சாக்கடைக் கால்வாய் அமைக்கும் பணி தொங்கப்பட்டது. இருப்பினும் இப்பணி முழுமையடையாமல் பாதியில் நிறுத்தப்பட்டு விட்டது. கடந்த ஒரு மாதமாகியும் பணி தொடங்கவில்லை.
இதனால் வீடுகள் முன்பு சாக்கடை நிரம்பி கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே சாக்கடை க் கால்வாய் அமைக்கும் பணியை தாமதிக்காமல் விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, சாக்கடைக் கால்வாய்க்கு இடையிலுள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்குமாறு மின் வாரியத்திடம் தெரியப்படுத்தியுள்ளோம். ஓரிரு நாள்களுக்குள் பணி தொடங்கி, விரைவில் முடிக்கப்படும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.