பல்லடம் நகராட்சிப் பகுதியில் வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வைத்திருக்கும் வீடுகளில் "ஏடிஎஸ் கொசுப் புழு இல்லாத வீடு' என பாராட்டுத் தெரிவிக்கும் வில்லைகளை நகராட்சி நிர்வாகம் ஒட்டி வருகிறது.
பல்லடம் நகராட்சிப் பகுதிகளில் கொசுப் புழு இல்லாத வீடாக வைத்திருக்குமாறு பொது மக்களுக்கு நகராட்சி ஆணையாளர் ஓ. ராஜாராம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், சுகாதார ஆய்வாளர் சங்கர் தலைமையில் சுகாதாரப் பணியாளற்கள் 9ஆவது வார்டு பட்டேல் வீதி, ஏ.ஜே.பி.வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுவீடாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வைத்திருக்கும் வீடுகளில் கதவுகளில் "கொசுப் புழு இல்லாத வீடு' என பாராட்டுத் தெரிவிக்கும் வில்லைகளை ஒட்டினர். இது குறித்து சுகாதார ஆய்வாளர் சங்கர் கூறியதாவது:
பல்லடம் நகராட்சியில் 15 ஆயிரம் வீடுகள் உள்ளன. வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திப்போரின் வீட்டுக் கதவுகளில் இத்தகைய பாராட்டுத் தெரிவிக்கும் வில்லைகளை ஒட்டி வருகிறோம். சுகாதாரம் இல்லாத வீட்டின் உரிமையாளர்களுக்கு முதல் கட்டமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. சுகாதாரம் இல்லாமல் இருப்பது தொடர்ந்து கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தலில் மீண்டும் 2ஜி சுனாமி!

தமிழகத்தில் 3 மாதங்களில் 100 உடல் உறுப்பு தானங்கள்: மருத்துவ வரலாற்றில் முதல்முறை
ஆட்சி மாற்றம் கண்டிப்பாக இருக்கும்! - தவெக பொருளாளா் பி. வெங்கடரமணன் சிறப்பு நோ்காணல்

திருவண்ணாமலை சண்முகா கல்லூரியில் ஆண்டு விழா
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

