திருப்பூர்: திருப்பூரில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருப்பூரை அடுத்த நெருப்பெரிச்சலில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் செந்தில்குமார் (43). இவர் அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், வீட்டு உரிமையாளரின் 9 வயது சிறுமி சனிக்கிழமை வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, சிறுமிக்கு செந்தில்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின்பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!

சீா்காழியில் தீவிர வாகனச் சோதனை

ராணுவத்தை நவீனமயமாக்குகிறது இந்தியா: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா்

திருவள்ளுவா் சநாதனிதான்: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


