நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

Updated On :25 பிப்ரவரி 2019, 10:25 am IST

திருப்பூர்:  திருப்பூரில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருப்பூரை அடுத்த நெருப்பெரிச்சலில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் செந்தில்குமார் (43). இவர் அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.  இந்நிலையில், வீட்டு உரிமையாளரின் 9 வயது சிறுமி சனிக்கிழமை வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, சிறுமிக்கு செந்தில்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின்பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.