தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி

திருப்பூரில், சாலையோரத்தில் மின்சார ஒயர் உரசியதால் சோளத்தட்டு ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து சேதமானது.

Updated On :23 ஜனவரி 2019, 9:41 am IST

திருப்பூரில், சாலையோரத்தில் மின்சார ஒயர் உரசியதால் சோளத்தட்டு ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து சேதமானது.
  திருப்பூர், முதலிபாளையத்தில் இருந்து சோளத்தட்டுகளுடன் நெகமம் பகுதி நோக்கிச் செவ்வாய்க்கிழமை  சென்று கொண்டிருந்த லாரி, வழியில் தெற்குப்பாளையம் அருகே சாலையோரத்தில் மின்சார ஒயரில் உரசியதால் தீப்பிடித்துக் கொண்டது. உடனே ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு உயிர்தப்பினர். சோளத்தட்டில் தீப்பிடித்து மளமளவெனப் பரவியது.
அவ்வழியாகச் சென்ற சிலர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால்,  தீ கொழுந்துவிட்டெறிந்தது.  
 இது குறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் தெற்கு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனர்.  தீ விபத்தில் லாரி முழுவதுமாக எரிந்து சேதமானது.
இது குறித்து ஊத்துக்குளி காவல் துறையினர் லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.