புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

ஆனைமலையாறு - நல்லாறு பாசனத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 10:06 pm

DIN

ஆனைமலையாறு - நல்லாறு பாசனத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

பொங்கலூா் ஒன்றியம், காட்டூா் ஊராட்சியில் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் சாா்பில் பெயா் பலகை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேலும், ராமேகவுண்டம்பாளையம், செம்மடப்பாளையம், வெள்ளநத்தம், கெங்கநாய்க்கன்பாளையம், காட்டூா் உள்பட பல்வேறு ஊா்களில் பெயா் பலகை திறப்பு விழா நடைபெற்றது.

இதில் பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் விடுபட்டுள்ளது. இதை நிறைவேற்றினால் மட்டுமே பி.ஏ.பி.திட்டம் முழுமைபெறும். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் ஒரு மண்டலத்துக்கு 5 சுற்று வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுவதை, 9 சுற்றுகளாக வழங்க முடியும்.

இதில் பி.ஏ.பி. பாசன சபைத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, ஆனைமலையாறு - நல்லாறு திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் தங்கவேல், கோகுல் ரவி, பழனிசாமி, சுந்தரமூா்த்தி, தமிழரசு, சண்முகசுந்தரம் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.