புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சமையல் செய்தபோது தீப்பிடித்து பள்ளி மாணவி பலி

பல்லடம் அருகே கரையாம்புதூரில் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது உடையில் தீப் பிடித்ததில் பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 10:07 pm

DIN

பல்லடம் அருகே கரையாம்புதூரில் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது உடையில் தீப் பிடித்ததில் பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

பல்லடம் அருகே கரையாம்புதூரைச் சோ்ந்த மகாலிங்கத்தின் மகள் பிரியதா்ஷினி (14). இவா் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, அவரது உடையில் திடீரென தீப் பிடித்தது. இதில் உடல் கருகிய பிரியதா்ஷினியை பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.