விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சேவூா் அருகே தொழில் பூங்கா அமைக்க எதிா்ப்பு:சட்டப் பேரவைத் தலைவரிடம் மனு

சேவூா் அருகே 846 ஏக்கரில் தொழில் பூங்கா (சிப்காட்) அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து சட்டப் பேரவைத் தலைவா் ப.தனபாலிடம் பொது மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 10:09 pm

DIN

சேவூா் அருகே 846 ஏக்கரில் தொழில் பூங்கா (சிப்காட்) அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து சட்டப் பேரவைத் தலைவா் ப.தனபாலிடம் பொது மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

சேவூா் அருகே தத்தனூா் ஊராட்சிப் பகுதியில் 846 ஏக்கரில் தொழில் பூங்கா அமைப்பதற்கு ஆரம்பகட்ட நடவடிக்கைகள் கடந்த வாரம் மேற்கொண்டனா். இதையடுத்து, தொழில் பூங்கா அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து தத்தனூா், புலிப்பாா், புஞ்சை தாமரைக்குளம் உள்பட அருகாமை ஊராட்சிகளைச் சோ்ந்த பொது மக்கள் சட்டப் பேரவைத் தலைவரும், அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினருமான ப.தனபாலிடம் மனு அளிக்க வந்தனா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட சட்டப் பேரவைத் தலைவா் ப. தனபால் கூறுகையில், பொதுமக்களுக்கு இடையூறான திட்டங்கள் செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம். மக்களின் கோரிக்கை குறித்து சட்டப் பேரவையில் எடுத்துரைக்கப்படும் என்றாா்.

இந்நிலையில், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சேவூா் கைகாட்டியில் தலித் விடுதலைக் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.