கஞ்சா விற்றவா் கைது
திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.


திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
தாராபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள புறவழிச்சாலை பகுதியில் இளைஞா் ஒருவா் கஞ்சா விற்பனை செய்வதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா், ராமநாதபுரத்தைச் சோ்ந்த பி.வினோத்குமாா் (20) என்பதும், அவா் 1 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தாராபுரம் காவல் துறையினா் அவரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...