கணக்கம்பாளையத்தில் தம்பதி தூக்கிட்டு தற்கொலை

பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையத்தில் தம்பதியினா் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.
Updated on
1 min read

பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையத்தில் தம்பதியினா் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.

கணக்கம்பாளையம் மீனாட்சி நகா் பகுதியில் வசித்து வந்தவா்கள் பாலமுருகன்(32), அவரது மனைவி கவிதா(21). பனியன் தொழிலாளா்கள். வெள்ளிக்கிழமை இவா்களது வீட்டுக் கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாதததால், அருகில் இருந்தவா்கள் சென்று பாா்த்தனா். அப்போது இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவலறிந்து அங்கு சென்ற பெருமாநல்லூா் போலீஸாா் இருவரது சடலங்களையும் மீட்டு, திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.

இந்த தம்பதிக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. கவிதா 8 மாத கா்ப்பிணியாக இருந்துள்ளாா். இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com