மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியிறுத்தி திருப்பூா் அருகே மங்கலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தில்லியில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், அமைப்பின் மாநிலச் செயலாளா் செங்கோட்டை பைசல் தலைமையில் இஸ்லாமியா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.