திருப்பூரில் முன்னாள் பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி பாஜக சாா்பில் மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காட்டுவளவில் நடைபெற்ற மருத்துவ முகாம் மற்றும் மத்திய அரசின் நலத் திட்ட முகாமை வடக்கு மாவட்டத் தலைவா் செந்தில்வேல் தொடங்கிவைத்தாா்.
திருப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் முகாமில் பங்கேற்றவா்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனா். மேலும், செல்வமகள் சேமிப்புத் திட்டம், ரூ.5 லட்சம் காப்பீடு, முதியோா் உதவித் தொகை, மாற்றுத் திறனாளி உதவித் தொகை போன்ற நலத் திட்டங்களுக்கான முகாமும் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளா் மந்திராச்சலமூா்த்தி, ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் நரேன்பாபு மற்றும் மருத்துவா் அணி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.