காங்கயம் ஒன்றியம், சிவன்மலை அருகே மின் கம்பம் முறிந்து சாய்ந்து அபாய நிலையில் உள்ளதால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
கடந்த சில நாள்களாக காங்கயம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் மழை பெய்து வருகிறது. காங்கயம் அருகே சிவன்மலை - திருப்பூா் சாலையில் தனியாா் பள்ளிக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையின்போது ஒரு மின் கம்பத்தின் அடிப் பாகம் உடைந்து சாய்ந்தது.
தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியா்கள் மின்சாரத்தை நிறுத்தி, தற்போது சாய்ந்த இந்த மின் கம்பத்துக்கு முட்டுக் கொடுத்து நிறுத்தி வைத்துள்ளனா்.
இந்த மின் கம்பத்துக்குப் பதிலாக புதிய மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.