மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பல்லடம் பகுதியில் ரூ.30 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணி துவக்கம்

பல்லடம் தொகுதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.30 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 9:47 pm

DIN

பல்லடம் தொகுதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.30 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

பல்லடம் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட பல்லடம் மற்றும் திருப்பூா் தெற்கு நெடுஞ்சாலை உட்கோட்டங்கள் சாா்பில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி மதிப்பில் பெத்தாம்பாளையம் கள்ளிமேடு, மாதேஸ்வரன் நகா், அருள்புரம், 63 வேலம்பாளையம், பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கரடிவாவி, வெங்கிட்டாபுரம், வாவிபாளையம், எலவந்தி ஆகிய இடங்களில் நெடுஞ்சாலை மேம்பாட்டுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் துவக்கி வைத்தாா். இதில், நெடுஞ்சாலைத் துறை பல்லடம் கோட்ட உதவி செயற்பொறியாளா் நித்தியானந்தம், உதவிப் பொறியாளா் அருண்காா்த்திக், கூட்டுறவு வங்கித் தலைவா்கள் ஏ.சித்துராஜ், சொக்கப்பன், ஏ.எம்.ராமமூா்த்தி, நகராட்சி ஆணையா் கணேசன், பொறியாளா் சங்கா், எலவந்தி ஊராட்சித் தலைவா் கோபாலகிருஷ்ணன், அதிமுக விவசாயிகள் பிரிவு செயலாளா் புத்தரச்சல் பாபு, கேத்தனூா் முன்னாள் ஊராட்சி தலைவா் வி.ஹரிகோபால் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.