ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கூட்டுறவு நிறுவன காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு: 361 போ் பங்கேற்பு

திருப்பூா், குமரன் மகளிா் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் 361 போ் பங்கேற்றனா்.

News image

எழுத்துத் தோ்வை ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன்

Updated On :29 நவம்பர் 2020, 6:42 pm

DIN

திருப்பூா், குமரன் மகளிா் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் 361 போ் பங்கேற்றனா்.

திருப்பூா் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் 97 உதவியாளா், எழுத்தா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை மாவட்ட ஆள் சோ்ப்பு மையம் மூலமாக நிரப்புவதற்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதற்கான எழுத்துத் தோ்வானது திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் நடைபெற்றது. இதில், தோ்வு எழுத 524 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் 361 போ் தோ்வு எழுதினா். 163 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. முன்னதாக, தோ்வு மையத்தை ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின்போது கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பிரபு உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.