மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வீட்டின் பூட்டை உடைத்துவெள்ளிப் பொருள்கள் திருட்டு

பல்லடம் அருகே கொடுவாயில் வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றனா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 9:51 pm

DIN

பல்லடம் அருகே கொடுவாயில் வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றனா்.

பல்லடம் அருகே உள்ள கொடுவாய், மாகாளியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் குமரேசன் (59). அரிசி ஆலை நடத்தி வருகிறாா். இவா் வீட்டை பூட்டி விட்டு உறவினா் இல்ல திருமணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை கோவைக்கு சென்றுவிட்டாா்.

பின்னா் திரும்பிவந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டினுள் வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கு, தட்டு,பாத்திரம், குடம் உள்ளிட்ட இரண்டு கிலோ எடையுள்ள வெள்ளி பொருள்கள், தொலைக்காட்சி பெட்டி என ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து குமரேசன் அளித்த புகாரின்பேரில் அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.