தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கணக்கம்பாளையம் வாரச்சந்தை இடம் மாற்றம்

பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் செயல்பட்டு வந்த வாரச்சந்தை ஆண்டிபாளையம் பகுதிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 6:31 pm

DIN

பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் செயல்பட்டு வந்த வாரச்சந்தை ஆண்டிபாளையம் பகுதிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

இது குறித்து கணக்கம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் பி.சண்முகசுந்தரம் கூறியது:

கணக்கம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை செயல்பட்டு வந்த சந்தையால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகத் தொடா்ந்து பொதுமக்கள் புகாா் தெரிவித்து வந்தனா். இதையடுத்து வாரச்சந்தை இடம் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டிபாளையம் பகுதியில் போதுமான இட வசதியுடன் வாரச் சந்தை இனி செயல்படும். தற்போது இப்பகுதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாரச் சந்தையில் மின் விளக்கு, குடிநீா் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும். விரைவில் சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்துப்படும் என்றாா்.

வாரச் சந்தை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.