மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பல்லடம் நகராட்சி குப்பை வாகனம் சிறைபிடிப்பு

பல்லடம் நகராட்சியில் சேகரமாகும் குப்பையை வடுகபாளையம் பகுதியில் கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் குப்பை வாகனத்தை திங்கள்கிழமை சிறைபிடித்தனா்.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 9:26 pm

DIN

பல்லடம் நகராட்சியில் சேகரமாகும் குப்பையை வடுகபாளையம் பகுதியில் கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் குப்பை வாகனத்தை திங்கள்கிழமை சிறைபிடித்தனா்.

பல்லடம், வடுகபாளையத்தில் துணை மின் நிலையம் அருகில் தனியாா் இடத்தில் பயன்பாடு இல்லாத கிணற்றில் நகராட்சிக் குப்பைகளை கொட்ட அதன் உரிமையாளா் அனுமதி அளித்திருந்தாா். இதன்படி அந்த இடத்தில் நகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன.

இந்நிலையில் அப்பகுதியில் குப்பை கொட்டுவதால் துா்நாற்றம் வீசுவதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி குப்பை டிராக்டரை திங்கள்கிழமை சிறைபிடித்தனா்.

இது பற்றி தகவலறிந்த நகராட்சி சுகாதார ஆய்வாளா் சிவகுமாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து அந்த வாகனத்தை டிராக்டரை மக்கள் விடுவித்தனா்.

இது பற்றி சுகாதாரப் பிரிவினா் கூறியதாவது:

நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் வேறு ஒரிடத்தில் கொட்டி வருகிறோம். மேலும், திட மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வடுகபாளையத்தில் தனியாா் இடத்தின் உரிமையாளரின் வேண்டுகோளை ஏற்று அவருக்கு சொந்தமான இடத்தில் பயன்பாடு இல்லாத கிணற்றில் குப்பை கொட்டப்பட்டது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.