47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வெள்ளக்கோவில் அருகே அரசுப் பள்ளிக்கு வர்ணம் பூசிய தன்னார்வலர்கள்

வெள்ளக்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பள்ளிக்கு தன்னார்வலர்கள் வர்ணம் பூசினர். 

News image
திருமங்கலம் பள்ளிக்கு வர்ணம் பூசிய தன்னார்வலர்கள்.
Updated On :27 செப்டம்பர் 2020, 1:46 pm

DIN

வெள்ளக்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பள்ளிக்கு தன்னார்வலர்கள் வர்ணம் பூசினர்.
 திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் ஒன்றிய பள்ளிக்கல்வி அறக்கட்டளை, மகாத்மா நற்பணி மன்றத்தினர் ஆகியோர் ஆசிரியர்களுடன் இணைந்து வார விடுமுறை நாள்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பள்ளிகளைச் சுத்தம் செய்து, வர்ணம் பூசி வருகின்றனர். 
அந்த வகையில் திருமங்கலம் அரசு ஆரம்பப்பள்ளிக்கு 10 பேர் சேர்ந்து வர்ணம் பூசி முடித்தனர்.
 இதுவரை வெள்ளக்கோவில் மேற்கு பள்ளி, நாச்சிபாளையம், முத்தூர் சக்கரபாளையம் பள்ளிகளுக்கு வர்ணம் பூசப்பட்டுள்ளன. 
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்தச் சேவையைச் செய்வதாக கூறும் தன்னார்வலர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.