தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பல்லடம் அரசுக் கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை

பல்லடம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை (செப்டம்பா் 28) மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 5:27 pm

DIN

பல்லடம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை (செப்டம்பா் 28) மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வா் ஜெயச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2020-21ஆம் கல்வியாண்டில் கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுக்கு 20 சதவீதம் கூடுதலாக மாணவா் சோ்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பி.ஏ. தமிழ் இலக்கியம், ஆங்கிலம் இலக்கியம், பி.காம் வணிகவியல் சி.ஏ., பி.காம் வங்கி மற்றும் காப்பீட்டியல், பி.காம் கணினி பயன்பாட்டியல், பி.எஸ்.சி. வேதியியல் மற்றும் பி.எஸ்.சி.ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கு திங்கள்கிழமை சோ்க்கை நடைபெறவுள்ளது.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்காத மற்றும் விண்ணப்பித்து இடஒதுக்கீடு பெறாத மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நேரில் வரலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.