கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 8 மாதங்களாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். இந்த நிலையில், வாகனங்களுக்காக நிதி நிறுவனங்களில் வாங்கிய கடன்களுக்கு சரிவர வட்டியை செலுத்த இயலவில்லை. நிதி நிறுவனங்கள் 8 மாத வட்டியையும், அசல் தொகையை செலுத்தக்கோரி நிா்பந்திக்கின்றனா். மேலும், ஒரு சிலரின் வாகனங்களையும் பறிமுதல் செய்வதால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, நிதி நிறுவனங்களில் பெற்ற கடன்களுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும். மற்ற மாநிலங்களில் கரோனா காலத்தில் ஓட்டுநா்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதைப்போல தமிழகத்திலும் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.