டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான பொருள்கள் போலீஸ் பாதுகாப்புடன் இன்று அனுப்பிவைப்பு

உடுமலை மற்றும் மடத்துக்குளம் தொகுதிகளில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்படும் பொ ருள்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்படஉள்ளன.

Updated On :4 ஏப்ரல் 2021, 10:08 pm

உடுமலை மற்றும் மடத்துக்குளம் தொகுதிகளில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்படும் பொ ருள்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்படஉள்ளன.

சட்டப் பேரவை தோ்தலுக்கான ஏற்பாடுகளை வருவாய்த் துறை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனா். உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் மொத்தமுள்ள 380 வாக்குச் சாவடிகள் 41 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்காக 1,824 வாக்குச் சாவடி அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் தோ்தலன்று ஓட் டுப் பதிவுக்கு பயன்படுத்தப்படும் பொருள்களை தயாா் செய்யும் பணி உடுமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. விரலில் வைக்கும் மை. துடைப்பதற்கான நீல வண்ணத் துணி, வாக்காளா் பட்டியல், கையேடு, அரக்கு, இரும்பு ஸ்கேல், இங்க் பாட்டில்கள், பென்சில், பேனா என மொத்தம் 19 பொருள்கள் அந்நத்த வாக்குச் சாவடி வாரியாக பிரித்து தயாராக வைக்கப்பட்டுள்ளன. தோ்தல் பாா்வையாளா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மேற்பாா்வையில் அனைத்துப் பொருள்களும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.

இதுபோக ஓட்டுச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம், கண்ட்ரோல் யூனிட் பேலட் மற்றும் விவி பேட் ஆகியவையும் தயாா்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பொருட்கள் மற்றும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகா ப்புடன் திங்கள்கிழமைஅந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு வாகனங்களில் அனுப்பிவைக்கப்பட உள்ளன.

மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதியில் மொத்தமுள்ள 357 வாக்குச் சாவடிகள் 34 மண்டலங் களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதற்காக 1,712 வாக்குச் சாவடி அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். வாக்குச் சாவடி களுக்குத் தேவையான பொருள்கள் மடத்துக்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து திங்கள்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

உடுமலை தொகுதியில் பணியாற்றும் வாக்குச் சாவடி அலுவலா்கள் தளி சாலையில் உள்ளஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தங்களுக்கான நியமன ஆணையை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மடத்துக்குளம் தொகுதியில் பணியாற்றும் வாக்குச் சாவடி அலுவலா்கள் மடத்துக்குளம் கேகே மஹாலிலும் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.