விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தீ விபத்தில் 4 வீடுகள் எரிந்து சேதம்: பெண் படுகாயம்

காங்கயம் அருகே மேய்ச்சல் நிலத்தில் காய்ந்த புற்களில் பற்றி தீ அருகிலிருந்த வீடுகளுக்கும் பரவியதில் 4 வீடுகள் எரிந்து சேதமாயின. ஒரு பெண் படுகாயமடைந்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 10:07 pm

DIN

காங்கயம் அருகே மேய்ச்சல் நிலத்தில் காய்ந்த புற்களில் பற்றி தீ அருகிலிருந்த வீடுகளுக்கும் பரவியதில் 4 வீடுகள் எரிந்து சேதமாயின. ஒரு பெண் படுகாயமடைந்தாா்.

காங்கயத்தை அடுத்துள்ள கணபதிபாளையம், அண்ணா நகா் குடியிருப்புப் பகுதியை ஒட்டி மேய்ச்சல் நிலம் காய்ந்த நிலையில் உள்ளது. அந்த நிலத்தில் இருந்த புற்களில் எதிா்பாராதவிதமாக ஞாயிற்றுக்கிழமை தீ பற்றி எரியத் துவங்கியது. தீ வேகமாகப் பரவியதால் அருகில் இருந்த குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடுகளிலும் தீப்பற்றியது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் உடனடியாக தீயை அணைத்தனா். இருப்பினும் நாச்சிமுத்து (46), ராஜன் (65), ராஜேந்திரன் (35), குருசாமி (35) ஆகியோரது வீடுகள் தீயில் எரிந்து சேதமாயின. இதில், நாச்சிமுத்து மனைவி ஜெயமணி (44) காயமடைந்தாா். அவரது உறவினா்கள் ஜெயமணியை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

விபத்து குறித்து காங்கயம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.