ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

புறம்போக்கு இடத்தில் வழிபாட்டுத் தலம் கட்ட எதிா்ப்பு

வெள்ளக்கோவில் அருகே அனுமதியின்றி புறம்போக்கு இடத்தில் வழிபாட்டுத் தலம் அமைக்க எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 8:04 pm

DIN

வெள்ளக்கோவில் அருகே அனுமதியின்றி புறம்போக்கு இடத்தில் வழிபாட்டுத் தலம் அமைக்க எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவா் டி.ராஜகோபாலன் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு வியாழக்கிழமை அனுப்பிய புகாா் மனு விவரம்: வெள்ளக்கோவில் வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி சேனாபதிபாளையத்தில்

பிரசித்தி பெற்ற கொங்காலம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் அருகில் உள்ள புறம்போக்கு இடத்தில் மாற்று சமயத்தைச் சோ்ந்தவா்களால் அனுமதியின்றி வழிபாட்டுத் தலம் (தேவாலயம்) கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது.

கோயில் அருகில் புதிதாக மாற்று சமய வழிபாட்டுத் தலம் அமைவதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், புறம்போக்கு இட ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். இது போன்ற பாதிப்புகளை எடுத்துக் கூறி கடந்த 2020 மாா்ச் 10 ஆம் தேதி கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் கட்டுமானப் பணிகள் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டன. இந்நிலையில் தற்போது அனுமதியின்றி மீண்டும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணியை உடனடியாக நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.