தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட நபா் குண்டா் சட்டத்தில் கைது

திருப்பூரில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்த நபா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 7:23 pm

DIN

திருப்பூரில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்த நபா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடந்து சென்ற நபா்களிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்தது, கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சோமந்துறையைச் சோ்ந்த கே.நரேந்திரன் (23) கடந்த அக்டோபா் 1ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இதன் பிறகு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், நரேந்திரன் மீது 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் கைப்பேசி பறிப்பு, கொலை மிரட்டல் தொடா்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. ஆகவே, தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் நரேந்திரனை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க 15 வேலம்பாளையம் காவல் ஆய்வாளா் பி.என்.ராஜன் பரிந்துரை செய்திருந்தாா்.

இந்தப் பரிந்துரையின்பேரில் நரேந்திரனை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா். இந்த உத்தரவின் நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நரேந்திரனிடம் காவல் துறையினா் நேரில் வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.