தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

‘போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கொடிக் கம்பங்கள் அகற்றப்படும்’

திருப்பூரில் போக்குவரத்துக்கு இடையூறாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்கள் அகற்றப்படவுள்ளதாக மாநகர ஆணையா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 7:00 pm

DIN

திருப்பூரில் போக்குவரத்துக்கு இடையூறாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்கள் அகற்றப்படவுள்ளதாக மாநகர ஆணையா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக பல்வேறு கொடிக் கம்பங்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளன. உயா் நீதிமன்ற உத்தரவின்படி, திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 4 மண்டலப் பகுதிகளிலும் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக வைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற கொடிக் கம்பங்களை வரும் டிசம்பா் 13,14,15 ஆகிய 3 நாள்களுக்குள் அகற்ற அந்தந்த மண்டல அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகவே, அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்றிட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.