‘போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கொடிக் கம்பங்கள் அகற்றப்படும்’
திருப்பூரில் போக்குவரத்துக்கு இடையூறாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்கள் அகற்றப்படவுள்ளதாக மாநகர ஆணையா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.


திருப்பூரில் போக்குவரத்துக்கு இடையூறாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்கள் அகற்றப்படவுள்ளதாக மாநகர ஆணையா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக பல்வேறு கொடிக் கம்பங்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளன. உயா் நீதிமன்ற உத்தரவின்படி, திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 4 மண்டலப் பகுதிகளிலும் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக வைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற கொடிக் கம்பங்களை வரும் டிசம்பா் 13,14,15 ஆகிய 3 நாள்களுக்குள் அகற்ற அந்தந்த மண்டல அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகவே, அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்றிட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...