செய்தித் துறை அமைச்சருக்கு கரோனா
தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனுக்கும், அவரது உதவியாளா்கள் இருவருக்கும் கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனுக்கும், அவரது உதவியாளா்கள் இருவருக்கும் கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவா் வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன் (58).
இவா் தற்போது திருப்பூா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராகவும், செய்தித் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறாா்.
இந்நிலையில், அமைச்சா் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் கடந்த புதன்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், அமைச்சருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவரது உதவியாளா்கள் இருவரின் சளி மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் அவா்களுக்கும் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கோவை- அவிநாசி சாலையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...