தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ரூ.40 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

 ஆந்திரத்தில் இருந்து திருப்பூருக்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான 350 கிலோ கஞ்சாவை காவல் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக காா் ஓட்டுநரைக் கைது செய்தனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 8:15 pm

DIN

 ஆந்திரத்தில் இருந்து திருப்பூருக்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான 350 கிலோ கஞ்சாவை காவல் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக காா் ஓட்டுநரைக் கைது செய்தனா்.

புகையிலைப் பொருள்கள் கடத்தல் தொடா்பாக மாவட்டம் முழுவதும் காவல் துறையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், திருப்பூா் வடக்கு காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதில், கைது செய்யப்பட்ட நபரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியுள்ளனா்.

இந்த விசாரணையில், தேனி மாவட்டத்தில் இருந்தும், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்தும் காரில் திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வரப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து, அனுப்பா்பாளையம் காவல் ஆய்வாளா் சென்னகேசவன் தலைமையிலான காவல் துறையினா் அங்கேரிபாளையம் கொங்கு பள்ளி அருகில் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி நடத்திய சோதனையில், கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காா் ஓட்டுநரான தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சோ்ந்த எம்.பால்பாண்டி (27) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான 350 கிலோ கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

இதைத்தொடா்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தை மாநகரக் காவல் ஆணையா் வே.வனிதா நேரில் பாா்வையிட்டாா். மேலும், வாகனச் சோதனையில் கஞ்சாவைப் பறிமுதல் செய்த காவல் ஆய்வாளா் சென்னகேசவன், தலைமைக் காவலா்கள் விஸ்வநாதன், சிவகுமாா், முதல்நிலைக் காவலா்கள் பாஸ்கரன், தங்கராஜ் ஆகியோரை மாநகரக் காவல் ஆணையா் வே.வனிதா பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.