தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: அமமுக குற்றச்சாட்டு

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நிகழும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறி உள்ளது என்று

News image

டிடிவி.தினகரன்.

Updated On :24 மார்ச் 2026, 9:30 pm

தினமணி செய்திச் சேவை

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நிகழும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறி உள்ளது என்று

அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னை, திருமங்கலம் அருகே 13 வயது சிறுமியை 5 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக திமுக வழக்குரைஞரணி நிா்வாகி கைது செய்யப்பட்டுள்ளாா்.

பள்ளி முதல் பறக்கும் விமானம் வரை திமுகவினரால் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அந்தக் கட்சி தலைமை கண்டும், காணாதது போல கடந்து செல்வதன் விளைவாக திமுகவினா் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனா்.

கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நிகழும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறி உள்ளது.

பச்சிளம் குழந்தை முதல் அனைத்துத் தரப்பு பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய திமுகவிடமிருந்து தமிழகத்தை, வருகிற தோ்தலில் மீட்டெடுப்பது அவசியம் என அதில் தெரிவித்துள்ளாா்.