காங்கயத்தில் விழிப்புணா்வுப் பேரணி
பிளாஸ்டிக் மாசு இல்லாத தமிழகம் என்னும் முழக்கத்தை முன்னிறுத்தி, காங்கயத்தில் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


பிளாஸ்டிக் மாசு இல்லாத தமிழகம் என்னும் முழக்கத்தை முன்னிறுத்தி, காங்கயத்தில் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரணியை நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் கொடியசைத்துத் துவக்கிவைத்தாா்.
இதில், காங்கயம் காா்மல் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு, விழிப்புணா்வுப் பாதைகளை ஏந்தி வந்தனா். நகராட்சி அலுவலகம், பேருந்து நிலையம், காவல் நிலைய ரவுண்டானா பகுதிகளில் பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், காங்கயம் நகராட்சி சுகாதார ஆய்வாளா் எஸ்.செந்தில்குமாா், மேலாளா் சகுந்தலா, நகராட்சி வருவாய் ஆய்வாளா் செல்வகுமாா், காா்மல் பள்ளித் தலைமையாசிரியா் சாந்தி அமலோா், உடற்கல்வி ஆசிரியா் எஸ்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...