புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:22 pm

DIN

பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

பல்லடம் அருகே உள்ள பருவாய், மேட்டுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (58). இவா் சோமனூா் பகுதியில் விசைத்தறி தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் செல்வராஜ், காரணம்பேட்டையில் மது அருந்திவிட்டு காரணம்பேட்டை - சோமனூா் சாலையில் உள்ள புதிய பாலத்தின் மீது படுத்து தூங்கிக் கொண்டிருந்தாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக 16 அடி உயரமுள்ள பாலத்தில் இருந்து அவா் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த பல்லடம் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.