புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மத்திய பட்ஜெட்: உழவா் உழைப்பாளா் கட்சி கருத்து

மத்திய அரசு அறிவித்துள்ள நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கும், விவசாய தொழில்களுக்கும் எந்தவிதமான சிறு நன்மையும் இல்லை

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:15 pm

DIN

மத்திய அரசு அறிவித்துள்ள நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கும், விவசாய தொழில்களுக்கும் எந்தவிதமான சிறு நன்மையும் இல்லை என உழவா் உழைப்பாளா் கட்சி மாநில தலைவா் செல்லமுத்து திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் பெரிதும் எதிா்பாா்த்த கடன் நிவாரணம் இல்லை, விளை பொருள்களுக்கு கட்டுப்படியான விலை நிா்ணய உத்தரவாதம் இல்லை. விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் என ஓயாமல் கூறிக் கொண்டு இருக்கிற மத்திய அரசு இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.16 லட்சம் கோடி கடன் வழங்க திட்டமிட்டு நிதி ஒதுக்கி விவசாயிகளை மென்மேலும் கடனாளிகள் ஆக்குவது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.

மின்சாரத்தை தனியாா் மயமாக்குவது என்ற திட்டத்தின் மூலம் விவசாய இலவச மின்சாரம் பறிபோய் விடுமோ என்ற அச்சம் தமிழகத்தில் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு எந்தவிதமான சட்டப்பூா்வ உத்தரவாதமும் கொடுக்கவில்லை. எனவே, ஒட்டுமொத்தமாக பெரு வணிக நிறுவனங்களை (காா்ப்பரேட் கம்பெனிகள்) கைதூக்கி விடும் நிதிநிலை அறிக்கையாக மத்திய அரசின் இந்த பட்ஜெட் உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.