பல்லடம் அருகே ரத்த தான முகாம்
பல்லடம் அருகே தேவணம்பாளையத்தில் மருத்துவப் பரிசோதனை முகாம், ரத்த தான முகாம் ஆகியன ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.


பல்லடம் அருகே தேவணம்பாளையத்தில் மருத்துவப் பரிசோதனை முகாம், ரத்த தான முகாம் ஆகியன ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம் தேவணம்பாளையம் கிராமத்தில் சுவாமி விவேகானந்தா இளைஞா் நற்பணி மன்றம், பொங்கலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் மருத்துவப் பரிசோதனை முகாம், ரத்த தான முகாம் ஆகியன அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றன.
பொங்கலூா் வட்டார மருத்துவ அலுவலா் சுந்தரவேல், மருத்துவா் சரவணமூா்த்தி உள்ளிட்டோா் பொது மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தினா். மேலும், இம்முகாமில் 34 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டு திருப்பூா் அரசு ரத்த வங்கிக்கு கொடுக்கப்பட்டது.
இதில் பொங்கலூா் ஒன்றியக் குழு தலைவா் குமாா், ஊராட்சி மன்றத் தலைவா் சத்யா பாலசுப்பிரமணியம், முன்னாள் ஊராட்சித் தலைவா் சுப்பிரமணி, வட்டார சுகாதார ஆய்வளா் கந்தசாமி, மன்றச் செயலாளா் சிவகுமாா், பொருளாளா் பாலாஜி, துணைத் தலைவா் சந்தோஷ்குமாா், துணைப் பொருளாளா் தமிழரசன் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...