ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருப்பூர் அருகே ஏடிஎம் இயந்திரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் 

திருப்பூர் அருகே ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :28 பிப்ரவரி 2021, 3:50 am

DIN

திருப்பூர் அருகே ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
திருப்பூரில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் பாங்க் ஆப் பரோடா வங்கி உள்ளது. இந்த வங்கியில் ஏடிஎம் இயந்திரமும் உள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நான்கு பேர் கொண்ட கும்பல் ஏடிஎம் மையத்திற்கு வந்துள்ளனர். 

Story image

பின்னர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராவுக்கு ஸ்ப்ரே அடித்துள்ளனர். தொடர்ந்து, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அப்படியே வெளியே எடுத்து வந்தனர். இதன்பிறகு தயாராக நிறுத்தி வாகனத்தில் ஏடிஎம் இயந்திரத்தை திருடிச் சென்றனர். 

Story image

இது குறித்து அந்த வழியாக வந்த கொடுத்த தகவலின் பேரில் ஊத்துக்குளி காவல்துறையினர் மற்றும் வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். ஏடிஎம் இயந்திரத்தை உள்ள ரூ.1 லட்சம் திருட்டு போனது தெரியவந்தது. 

Story image

இதுதொடர்பாக கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.