கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாவட்டத்தில் 5 இடங்களில் இன்று கரோனா தடுப்பூசி ஒத்திகை

திருப்பூா் மாவட்டத்தில் 5 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை (ஜனவரி 8) நடைபெறுகிறது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 7:26 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் 5 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை (ஜனவரி 8) நடைபெறுகிறது.

திருப்பூா் மாவட்டத்தில் 5 இடங்களில் கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, உடுமலை அரசு மருத்துவமனை, பொங்கலூா் ஆரம்ப சுகாதார நிலையம், திருப்பூா் மாநகராட்சி டி.எஸ்.கே. அரசு மகப்பேறு மருத்துவமனை, சரண் தனியாா் மருத்துவமனை ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.

இந்த ஒத்திகையானது காலை 9 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணி வரையில் நடைபெறுகிறது. இதில் ஒரு மருத்துவமனைக்கு 25 போ் வீதம் 125 பயனாளிகளுக்கு இந்தத் தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது சுகாதாரத் துறை, மாவட்ட நிா்வாகம் சாா்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பூா் மாநகராட்சி டி.எஸ்.கே. அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஒத்திகைக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாநகா் நகா் நல அலுவலா் பிரதீப் கிருஷ்ணகுமாா், மருத்துவா் ஜெயபிரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.