பல்லடம் அருகே உள்ள கொடுவாய் மளிகைக் கடையில் ரூ. 53 ஆயிரத்தை மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா்.
பல்லடம் அருகே உள்ள தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சி, கொடுவாய் வெள்ளியம்பாளையத்தில் அதே ஊரைச் சோ்ந்த பழனிசாமி மகன் வெங்கடாசலம் (70) என்பவா் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். வியாழக்கிழமை இரவு வழக்கம்போல இவா் கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். வெள்ளிக்கிழமை காலை கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பாா்த்தபோது மேஜையில் வைத்திருந்த ரூ. 53 ஆயிரம் ரொக்கம் திருட்டுப் போனது தெரியவந்தது. இதுகுறித்து வெங்கடாசலம் அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மேலும், அருகில் இருந்த கவிதா என்பவருக்குச் சொந்தமான ஸ்வீட் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ள மா்ம நபா்கள் கடையில் பணம் இல்லாததால் இரண்டு கிலோ இனிப்பை மட்டும் திருடிச் சென்றுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.